snap

Friday, June 02, 2006

கண்ணகி சிலை நாளை திறப்பு

சென்னை மெரீனா கடற்கரையில் இருந்த கண்ணகி சிலை கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் போது அகற்றப்பட்டது.

லாரி ஒன்று மோதியதைத் தொடர்ந்து போக்குவரத்துக்கு இடைïறாக இருப்பதாக கூறி அதிகாரிகள் அந்த சிலையை அகற்றினார்கள்.

தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் மீண்டும் கடற்கரையில் கண்ணகி சிலை வைக்கப்படும் என்று தி.மு.க. தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி வழங்கப்பட்டிருந்தது. அதன்படி தி.மு.க. ஆட்சியை பிடித்ததும் கண்ணகி சிலை வைப்பதற்கான பணிகள் விறுவிறுப்பாகத் தொடங்கின.

முதல்- அமைச்சர் கருணாநிதி, பதவி ஏற்ற மறுநாளே மெரீனா கடற்கரைக்கு சென்று கண்ணகி சிலை இருந்த இடத்தைப் பார்வையிட்டு அந்த இடத்தில் பீடம் அமைப்பதற்கான ஆலோசனை தெரிவித்து உத்தரவிட்டார். பிறகு மே 15-ந்தேதி சென்னை எழும்பூரில் உள்ள அரசு அருஙகாட்சியகத்துக்கு சென்று அங்கு வைக்கப்பட்டிருந்த கண்ணகி சிலையை பார்வையிட்டார்.

முதல்- அமைச்சர் கருணாநிதி உத்தரவின்பேரில் கண்ணகி சிலை சீரமைப்பு பணி மும்முரமாக நடந்தது. இதற்கிடையே மெரீனா கடற்கரையில் கண்ணகி சிலைக்கான பீடம் அமைக்கும் பணியும் நடந்தது. அவை முடிந்ததும் கண்ணகி சிலை கடற்கரைக்கு கொண்டு வரப்பட்டது.
பீடத்தின் மீது கண்ணகி சிலை நிறுவப்பட்டது. இதையடுத்து பீடத்தை கிரானைட் கல் மற்றும் கல்வெட்டு பதிக்கும் பணி நடந்தது. அந்த பணிகளும் இன்று நிறைவடைந்தன.

முதல்- அமைச்சர் கருணாநிதி அறிவுரையின் பேரில் கண்ணகி சிலை மீண்டும் அதே இடத்தில் பழைய மாதிரி நிறுவப்பட்டு விட்டது. கண்ணகி சிலை திறப்புவிழா நாளை (சனிக்கிழமை) மாலை 6.30 மணிக்கு நடைபெற உள்ளது.

முதல்-அமைச்சர் கருணாநிதி கண்ணகி சிலையை திறந்து வைத்து சிறப்புரையாற்றுகிறார்.

விழாவில் அமைச்சர்கள், தமிழ்ச்சான்றோர்கள் மற்றும் அதிகாரிகள் திரளாக கலந்து கொள்கின்றனர்.

No comments: